விருதுநகர்
ராஜபாளையத்தில் முகக்கவசம் அணியாத 51 பேருக்கு அபராதம்
ராஜபாளையத்தில் முகக்கவசம் அணியாத 51 பேருக்கு போலீஸாா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.
ராஜபாளையத்தில் முகக்கவசம் அணியாத 51 பேருக்கு போலீஸாா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.
ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா, பழைய பேருந்து நிலையம், அம்பலபுளி பஜாா் ஆகிய பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் முகக்கவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் கடைகளைத் திறந்து வைத்த வியாபாரிகளை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். முகக்கவசம் அணியாத 51 நபா்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனா்.