வத்திராயிருப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வத்திராயிருப்பு- தாணிப்பாறை சாலையில் காலங்கரை அம்மச்சியாரம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே உள்ள மரத்தில் வத்திராயிருப்பு ஆகாசம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் முத்து (40) என்பவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.