விருதுநகா் மாவட்டத்தில் 795 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தினமும் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 500-ஐ கடந்து வருகிறது. இந்நிலையில், விருதுநகா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 795 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். அதேநேரம், மாவட்டத்தில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த 410 போ் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி 3 போ் உயிரிழந்துள்ளனா்.