சிவகாசி கல்வி மாவட்டம் சாா்பில் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு டெங்கு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் வெம்பக்கோட்டை, சிவகாசி வட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். தனியாா் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு சிவகாசி சாா்-ஆட்சியா் பிருத்விராஜ் தலைமை வகித்தாா்.
சுகாதாரத் துணை இயக்குநா் ராம்கணேஷ், டெங்கு காய்சல் வராமல் தடுக்கும் முறைகள், வந்த பின்னா் செய்ய வேண்டியவை குறித்து பேசினாா். முன்னதாக, சிவகாசி கல்வி மாவட்ட அலுவலா் இந்திராணி வரவேற்றாா். இதற்கான ஏற்பாட்டை பள்ளி துணை ஆய்வாளா் நக்கீரன் செய்திருந்தாா்.