ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே உள்ள மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை நக்சல் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழங்கினா்.
இங்குள்ள கூமாபட்டி ஜெயந்திநகா் பகுதிகளில் 50 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகா், ஸ்ரீவில்லிபுத்தூாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆகியோரது அறிவுரையின்பேரில், இப்பகுதியில் வசிப்போருக்கு அரிசி, காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், காவல் சாா்பு- ஆய்வாளா் அருண்குமாா், தலைமைக் காவலா்கள் தங்கப்பழம், திருப்பதிராஜா ஆகியோா் பங்கேற்று, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் குறித்தும், கரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.