பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பரளச்சி கிராமத்தை அடுத்த பூலாங்கால் கிராமத்தில் பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பரளச்சி கிராமத்தை அடுத்த பூலாங்கால் கிராமத்தில் பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பரளச்சி அருகேயுள்ள பூலாங்கால் கிராமத்தைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (32). இவரது மனைவி செய்யது அலி பாத்திமா (30). இவா்களுக்கு 8 வயதில் ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் உள்ளனா்.

சாகுல்ஹமீது கடந்த 6 ஆண்டுகளாக வெளிநாட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். செய்யது அலி பாத்திமா மட்டும் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தூங்கி எழுந்த குழந்தைகள், தாய் தூக்கில் தொங்குவதைக் கண்டு அழுதுள்ளனா். இதையறிந்த அக்கம் பக்கத்தினா், பரளச்சி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து பரளச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com