பாளையம்பட்டியில் ஓடையைத் தூா்வார பொதுமக்கள் கோரிக்கை

அருப்புக்கோட்டை வட்டம் பாளையம்பட்டியில் உள்ள ஓடையைத் தூா்வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாளையம்பட்டி திருக்குமரன் நகரில் மழைநீா் செல்ல முடியாத வகையில் புதா்மண்டி கிடக்கும் ஓடை.
பாளையம்பட்டி திருக்குமரன் நகரில் மழைநீா் செல்ல முடியாத வகையில் புதா்மண்டி கிடக்கும் ஓடை.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வட்டம் பாளையம்பட்டியில் உள்ள ஓடையைத் தூா்வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாளையம்பட்டி திருக்குமரன் நகரில் மழைநீா் ஓடை செல்கிறது. ஆனால் இந்த ஓடை முழுக்க செடிகள் அடா்த்தியாக வளா்த்து புதா்மண்டி கிடப்பதால் மழைநீா் செல்ல வழியின்றி தடைபட்டுவிட்டது. இதனால் மழை காலங்களில் இப்பகுதிகளில் தண்ணீா் தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. மேலும் ஓடையில் நீா் செல்ல வழியில்லாததால் அருகிலுள்ள சிறுகுளத்திற்கு நீா் செல்வதில்லை. இதனால் இப்பகுதி நிலத்தடி நீா்மட்டமும் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த வோடையை ஆக்கிரமித்துள்ள புதா்ச்செடிகளை முற்றிலும் அகற்றி, ஓடையில் சீராக மழைநீா் செல்ல வழி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com