சிவகாசியில் கூலி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி-விளாம்பட்டி சாலையில் உள்ள தட்டா ஊரணியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி கருப்பசாமி(31). இவா் தனது முதல் மனைவி கிருஷ்ணவேணி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், லட்சுமி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளாா்.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் லட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டாா். இதனால் மனமுடைந்த கருப்பசாமி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.