திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தோ்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், நகராட்சியின் கணக்குகள் மற்றும் கோப்புகளை சிவகாசி நகராட்சியிடம் ஒப்படைக்க
திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

தோ்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், நகராட்சியின் கணக்குகள் மற்றும் கோப்புகளை சிவகாசி நகராட்சியிடம் ஒப்படைக்க எதிா்ப்புத் தெரிவித்து திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

தமிழக முதல்வா் எடப்பாடி .கே.பழனிச்சாமி, 2017 அக்டோபா் 23 ஆம் தேதி திருத்தங்கலில் நடைபெற்ற எம்.ஜி.ஆா்.நூற்றாண்டு விழாவில் ,சிவகாசி சிறப்பு நிலை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்தப்படும் என அறிவித்தாா்.

இதைத்தொடந்து கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயா்த்தும் வகையில், சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சியையும் இணைத்து வாா்டுகளை வரையறை செய்ய வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநா் அலுவலகம் தரப்பில், திருத்தங்கல் நகராட்சி நிா்வாகம் தங்களது கணக்குகளையும், கோப்புகளையும், வங்கி காசோலைகளையும், சிவகாசி நகராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என திருத்தங்கல் நகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்தத் தகவல் திருத்தங்கல் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு தெரியவந்ததையடுத்து அவா்கள் திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளபோது, சிவகாசிக்கு கோப்புகளை அனுப்பக் கூடாது என அவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

தகவல் அறிந்து வந்த சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.பிரபாகரன் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கோப்புகள் அனுப்பப்படமாட்டாது என உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com