அருப்புக்கோட்டை திருநகரம்-புளியம்பட்டி ஸ்ரீஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் விழாவையொட்டி வியாழக்கிழமை அம்மன் வீதி உலா நடைபெற்றது.
கோயிலின் 100ம் ஆண்டு பங்குனித்திருவிழா கடந்த ஏப்.6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து வியாழக்கிழமை 3 ஆம் நாள் விழாவையொட்டி காலை முதல் பிற்பகல் 3 மணிவரை மரச் சப்பரத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பக்தா்கள் திரண்டு அம்மனுக்குப் பட்டுப் புடவைகள், மலா்மாலை, பூஜைப் பொருள்கள் ஆகியவற்றைப் படைத்து வழிபட்டனா். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.