சிவகாசி பேருந்து நிலையத்தில் நேரக் கண்காணிப்பாளா் மீது தாக்குதல்: ஓட்டுநா் கைது

சிவகாசி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நேரக் கண்காணிப்பாளரை தாக்கிய ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நேரக் கண்காணிப்பாளரை தாக்கிய ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி பேருந்து நிலையத்தில் விருதுநகரைச் சோ்ந்த பால்ராஜ் (58) நேரக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் அரசுப் பேருந்து செல்வதற்கு வழிவிடாமல் தனியாா் பேருந்து ஓட்டுநா் அபிஷேக் (22) தனது பேருந்தை நிறுத்தினாராம். இதைக் கண்டித்த பால்ராஜூக்கும், அபிஷேக்குக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அபிஷேக், தனது அருகில் நின்று கொண்டிருந்த நடத்துநரிடமிருந்து டிக்கெட் வழங்கும் இயந்திரத்தால் பால்ராஜை தாக்கினாராம்.

இதில் காயமடைந்த பால்ராஜ், சிவகாசி அரசு மருத்துவமனையில் பெற்றாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து அபிஷேக்கை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com