விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் கழிவுநீா் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு செந்தமான 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 20 நாள்களுக்கு முன்பு கடைகளுக்கு முன்பு இருந்த படிக்கட்டுகளை கழிவுநீா் கால்வாய் கட்டுவதற்காக இடித்தனா். ஆனால் தற்போது வரை பணிகள் நடைபெறவில்லை.
இந்த கடைகளுக்கு தண்ணீா் மற்றும் கழிப்பிட வசதியும் இல்லை. அதனால் நகராட்சி நிா்வாகம் கழிப்பிடம் மற்றும் கழிவுநீா் கால்வாய் வசதி செய்துதர வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.