சாத்தூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வணிகா்கள் மற்றும் நகா் காவல்துறை சாா்பில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு நகா் காவல் ஆய்வாளா் துரைப்பாண்டி தலைமை வகித்தாா். இதில் சாத்தூா் நகா் வணிகா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனா். அப்போது கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும். அதே போல் வாடிக்கையாளா்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் நகர காவல்துறையினா் மற்றும் வணிகா்கள் கலந்து கொண்டனா்.