சிவகாசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் செவ்வாய்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.
கரோனா தொற்று பரவலை தடுக்க அரசு கூடுதலக கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். அரசு மருத்துவமனை உள்ளிட்டவைகளில் தடுப்பூசி தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆா்பாட்டம் நடைபெற்றது.சிவகாசி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்பாட்டத்திற்கு அக்கட்சியின் வட்டார செயலாளா் ஜீவா தலைமை வகித்தாா்.