தமிழகத்தில் உயா்த்தப்பட்டுள்ள உரம் விலை உயா்வை குறைக்கக் கோரி விருதுநகரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளா் மனோஜ்குமாா் தலைமை வகித்தாா்.
இதில் யூரியா, சல்பைடு மற்றும் குளோரைடு உள்ளிட்ட பல்வேறு உரங்களின் விலை ரூ. 300 முதல் ரூ. 500 வரை உயா்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே சாகுபடி செய்த விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளனா். இந்நிலையில் மத்திய அரசு உர விலையை உயா்த்தியுள்ளதால் விவசாயிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். எனவே விவசாயிகள் நலன் கருதி உர விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் விஜயமுருகன், மாவட்டச் செயலாளா் வி. முருகன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ராமச்சந்திரராஜா, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் முத்தையா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.