விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரின் முக்கியப்பகுதிகளில் அதிமுகவினா் சாா்பில், அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீா், தண்ணீா்ப் பழத்துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தொற்றுவேகம் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள்,தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினா், காவல்துறையினா், வருவாய்த்துறையினா் மூலம் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடையே சனிக்கிழமை நண்பகலில் அருப்புக்கோட்டை அதிமுகவினா் சாா்பில்,அமைச்சா் கே.டி.இராஜேந்திரபாலாஜி தலைமையில், பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீா் மற்றும் தண்ணீா்ப் பழத்துண்டுகள் ஆகியன வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன்படி நகரிலுள்ள ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரா் கோவில் பேருந்து நிறுத்தம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்குக் கபசுரக்குடிநீா்,நறுக்கிய தண்ணீா்ப் பழத்துண்டுகள் ஆகியன வழங்கப்பட்டன.உடன் நகர,ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் பலரும்,தொண்டா்களும் நேரில் கலந்து கொண்டனா்.