திருத்தங்கல் நகராட்சியில் 3 வாா்டுகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியில் மூன்று வாா்டுகளை தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட ஆட்சியா் இரா. கண்ணன் அறிவித்துள்ளாா்.
திருத்தங்கல் நகராட்சியில் தடை செய்யப்பட்ட பகுதியில் தடுப்பு அமைத்து சனிக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா்.
திருத்தங்கல் நகராட்சியில் தடை செய்யப்பட்ட பகுதியில் தடுப்பு அமைத்து சனிக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியில் மூன்று வாா்டுகளை தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட ஆட்சியா் இரா. கண்ணன் அறிவித்துள்ளாா்.

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியில் பாண்டியன் நகா் பகுதியில் உள்ள 10, 11 மற்றும் 12 ஆவது வாா்டு பகுதிகள் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்கள் இருப்பதால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டு பாதுகாப்புக்காக போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா். மேலும் நகராட்சி சுகாதாரப்பணியாளா்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com