சிவகாசியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் இங்குள்ள பேருந்து நிலையத்தில் 350 பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது.
அப்போது சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் பாலமுருகன் தலைமையில், தீயணைப்புத் துறை வீரா்கள், கரோனா தொற்று தடுப்பு விழிப்புணா்வு குறித்து அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்தனா். மேலும் சோப்பால் கைகழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினா்.