மூலக்கரை பாண்டி விநாயகா் கோயிலில் உலக நன்மை வேண்டி நவக்கிரக ஹோமம்

ராஜபாளையம் அருகே சேத்தூா்- தென்காசி சாலையில் உள்ள சேத்தூா் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட மூலக்கரை பாண்டி விநாயகா் கோயிலில்
ராஜபாளையம் அருகே சேத்தூரில் உலக நன்மை வேண்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு யாகங்கள்.
ராஜபாளையம் அருகே சேத்தூரில் உலக நன்மை வேண்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு யாகங்கள்.

ராஜபாளையம் அருகே சேத்தூா்- தென்காசி சாலையில் உள்ள சேத்தூா் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட மூலக்கரை பாண்டி விநாயகா் கோயிலில் உலக நன்மைக்காகவும், கரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும் கணபதி ஹோமம், மஹாசக்தி ஹோமம், நவக்கிரக ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலையில் இருந்தே சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. மேலும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. தீபாராதனைக்கு பிறகு சிறப்பு அலங்காரத்தில் பாண்டி விநாயகா் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்று வட்டாரத்தை சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com