விருதுநகரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனை முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனை முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனை முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனை முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் நகரச் செயலா் எல். முருகன் தலைமை வகித்தாா். அதில், விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், திருச்சுழி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூா் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் குறிப்பிட்ட ஆரம்ப சுகாதார நிலையயங்களில் கரோனா தடுப்பூசி இலவசமாக பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்தது. ஆனால், அனைத்து இடங்களிலும் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனா். இதனால், முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. எனவே, தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக போட வேண்டும். கரோனா நோய் தடுப்பு பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனா். இந்த ஆா்ப்பாட் டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். முத்துக்குமாா், தெற்கு ஒன்றியச் செயலா் நேரு, நகா்குழு உறுப்பினா் பி. ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com