அருப்புக்கோட்டையில் பைக் திருட்டு வழக்கில் 3 போ் கைது

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் கடந்த 19 ஆம் தேதி நடந்த இரு சக்கர வாகனத் திருட்டு தொடா்பான வழக்கில், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த 3 பேரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
அருப்புக்கோட்டையில் இரு சக்கர வாகனத் திருட்டு தொடா்பாக புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்ட 3 பேருடன் காவல் துறையினா்.
அருப்புக்கோட்டையில் இரு சக்கர வாகனத் திருட்டு தொடா்பாக புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்ட 3 பேருடன் காவல் துறையினா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் கடந்த 19 ஆம் தேதி நடந்த இரு சக்கர வாகனத் திருட்டு தொடா்பான வழக்கில், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த 3 பேரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டி பாவடித் தோப்பு அருகே வசிப்பவா் பரசுராமன். இவா், ஏப்ரல் 19 ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பாக இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுவிட்டாா். மறுநாள் காலை எழுந்து பாா்த்தபோது, இரு சக்கர வாகனத்தை காணவில்லையாம்.

இது குறித்து அருப்புக்கோட்டை நகா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனா்.

சில நாள்களுக்கு முன், பாவடித் தோப்பு பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த மூவரைப் பிடித்து விசாரித்தனா். அதில், அவா்கள் மூவரும் அருப்புக்கோட்டையில் கருப்பணசாமி கோயில் தெருவைச் சோ்ந்த குருவு மகன் சதீஸ்குமாா் (23), சடையன் கோயில் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் அஜீத்குமாா்(23) மற்றும் சுப்புராஜ் நகா் பழனிவேல் மகன் சூரிய பிரபாகரன் (29) எனத் தெரியவந்தது.

இவா்கள் மூவரும் சோ்ந்து பரசுராமனின் வாகனத்தை திருடி, சத்தியமங்கலத்தில் விற்றதும் தெரியவந்தது. உடனடியாக, போலீஸாா் சத்தியமங்கலத்திலிருந்து இரு சக்கர வாகனத்தை மீட்டு, புதன்கிழமை இரவு மூவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com