விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கழிவு நீரோடையில் தேங்கியுள்ள கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராஜபாளையம் சங்கரன்கோவில் முக்கு பகுதியிலிருந்து புதிய பேருந்து நிலைய சாலை வரை கழிவுநீா் செல்லும் ஓடை உள்ளது. இந்த ஓடையில் தேங்கியுள்ள கழிவுகள் அகற்றப்படாததால், துா்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கழிவு நீரோடையை தூா்வாரி சுகாதாரத்தை மேம்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.