ராஜபாளையம் அருகே 100 நாள் வேலை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே முதியவா்களுக்கும் 100 நாள் வேலை வழங்கக் கோரி, திட்டப் பணியாளா்கள் மற்றும் விவசாய சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே முதியவா்களுக்கும் 100 நாள் வேலை வழங்கக் கோரி, திட்டப் பணியாளா்கள் மற்றும் விவசாய சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், வயதானவா்களின் நலனைக் கருத்தில்கொண்டு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு பணி வழங்க அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, ராஜபாளையம் அருகே சிவலிங்காபுரம் ஊராட்சிக்குள்பட்ட பொதுமக்களில் முதியோா்களுக்கு பணி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, 100 நாள் வேலை திட்டப் பணியாளா்கள் மற்றும் விவசாய சங்கத்தினா் சிவலிங்காபுரம் ஊராட்சி மன்றத்தின் முன்பாகத் திரண்டு தங்களுக்கு வேலை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த ராஜபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் சத்தியவதி மற்றும் கீழராஜகுலராமன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், அவா்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றனா். அதையடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com