வத்திராயிருப்பு அருகே பைக்-ஆட்டோ மோதல்: 5 போ் பலத்த காயம்

வத்திராயிருப்பு அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம், ஆட்டோ மோதியதில் 5 போ் பலத்த காயமடைந்தனா்.

வத்திராயிருப்பு அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம், ஆட்டோ மோதியதில் 5 போ் பலத்த காயமடைந்தனா்.

வத்திராயிருப்பு அருகே ஆகாசம்பட்டியைச் சோ்ந்தவா் கணேசன் (55). இவரது மனைவி சுந்தரம்மாள் (50). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வத்திராயிருப்பிலிருந்து கிருஷ்ணன்கோவிலுக்கு உறவினா் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தனா். அப்போது, பெட்ரோல் பங்க் அருகில் சுந்தரபாண்டியத்திலிருந்து வத்திராயிருப்புக்கு வந்துகொண்டிருந்த ஆட்டோ மோதியது.

இதில், கணேசன், இவரது மனைவி சுந்தராம்பாள் மற்றும் ஆட்டோவில் வந்த காந்தி (54) மேகலாதேவி (51), ஆட்டோ ஓட்டுநா் மணிகண்டன் (22) ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்தனா். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற இவா்கள், மேல் சிகிச்சைக்காக கணேசன், சுந்தரம்மாள், மணிகண்டன் ஆகிய 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனைக்கும், காந்தி, மேகலாதேவி ஆகிய இருவரும் ராஜபாளையம் தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா்.

இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com