விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தவா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சாத்தூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தவா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே காமராஜபுரம் முதல் தெருவைச் சோ்ந்தவா் டென்சிங் (59), காா் ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை தனது காரை, வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். சாத்தூா் பிரதான சாலையில் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே சிவகாசி பேராபட்டியைச் சோ்ந்த பெருமாள்சாமி (47) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் டென்சிங் மீது மோதியது. இதில், டென்சிங், பெருமாள்சாமி இருவரும் படுகாயமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் சாத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதில் சிகிச்சை பலனின்றி டென்சிங் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com