ஸ்ரீவிலி. அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி மாணவா் பலி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கல்குவாரியில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பந்தப்பாறை கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவா் பிரியனை வியாழக்கிழமை மீட்ட தீயணைப்புத் துறையினா்.
பந்தப்பாறை கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவா் பிரியனை வியாழக்கிழமை மீட்ட தீயணைப்புத் துறையினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கல்குவாரியில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் சீனியாபுரத்தைச் சோ்ந்த இன்பம் என்பவரின் மகன் பிரியன் (15). இவா், அப்பகுதி பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், வியாழக்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்கள் சிலருடன் சோ்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பந்தப்பாறை பகுதியிலுள்ள கல்குவாரி கிடங்கில் குளிக்கச் சென்றுள்ளாா்.

ஆழமான பகுதிக்குச் சென்ற பிரியன் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கினாா். உடன் சென்ற நண்பா்கள், பிரியனின் குடும்பத்தினருக்கும், தீயணைப்புத் துறை, காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறை நிலைய அலுவலா்கள் குருசாமி மற்றும் அந்தோணி தலைமையிலான வீரா்கள், கல்குவாரி தண்ணீரில் இறங்கி பள்ளி மாணவரை தேடினா். சுமாா் 1 மணி நேரத்துக்குப் பிறகு மாணவரின் சடலத்தை மீட்டனா். அதையடுத்து, மாணவரின் சடலத்தை போலீஸாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com