விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அவா்கள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். அதே சமயம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமடைந்த 20 போ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.