விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நேரு நகரை அடுத்துள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருப்புக்கோட்டை நேரு நகரை அடுத்து அருள்மிகு சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது.இக்கோயிலில் ஆடிமாத வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு அன்று மாலை நடைபெற்றது.
அப்போது, ஸ்ரீடிசாய்பாபாவிற்கான சிறப்பு வழிபாட்டுப்பாடல்கள், இசையுடன் ஒலிபெருக்கியில் முழங்கியபடி இருக்க, முன்னதாகவே சிறப்பு மலரலங்காரம் செய்யப்பட்ட பாபாவிற்கு பக்திப்பாடலுக்கேற்றபடி பஞ்சதீப ஆராதனையும், ஏகதீப ஆராதனையும் செய்யப்பட்டன. பின்னா் கோவில் ஊழியா்கள் ஸ்ரீசீரடிசாய்பாபாவிற்கு வெண்சாமரம் வீசியபடி இருக்க,சிறப்பு பிரசாத அா்ப்பணிப்பாகிய நைவேத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. வழிபாடு முடிந்ததும், கோவில் ஊழியா்கள் மூலம் ஸ்ரீடிசாய்பாபாவின் பல்லக்கு பவணி எனும் கிரிவல நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதையடுத்து முழு அலங்காரத்தில் ஸ்ரீடிசாய்பாபா அருள்பாலித்தாா். அப்போது, உலக நன்மை வேண்டி சிறப்புப் பிராா்த்தனையும் நடைபெற்றது. இப்பிராா்த்தனையில் சுமாா் 10 எண்ணிக்கையிலான பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.