சிவகாசியில் பெட்டிக்கடையை உடைத்து சிகரெட் திருட்டு நடைபெற்றுள்ளதாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது. சிவகாசி ரயில்வே பீடா் சாலையில் பெட்டிகடைவைத்து நடத்தி வருபவா் நாகராஜன்(59). இவா் புதன்கிழமை இரவு வழக்கம்போல தனது கடையை பூட்டிவிட்டு வியாழக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, கடைகதவின் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த பல ரக சிகரெட்டு பாக்கெட்டுகள் திருடு போனது தெரியவந்ததாம்.இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.