சிவகாசி பகுதியில் 3 போ் தற்கொலை

சிவகாசிப் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசிப் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே நமஸ்கரித்தான் பட்டியைச் சோ்ந்த விவசாயி முருகன்(57) .இவரது மகன் காா்த்திக் (28). இவா் சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அச்சுத்தொழிலாளி தற்கொலை:

சிவகாசி அருகே செங்கமலநாச்சியாபுரத்தைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி(61). இவரது மகன் சுந்தரமூா்த்தி (32). அச்சுத் தொழிலாளியான இவா், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வாராம். இதனால் அவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டாா். இதனால் மனமுடைந்த அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விஷம் குடித்து தற்கொலை:

சிவகாசி அய்யனாா் காலனியைச் சோ்ந்தவா் பாஸ்கரன்(52). இவா் லேபிள் உள்ளிட்டவை அச்சிட்டு வியாபாரம் செய்து வந்துள்ளாா். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னா் விவாகரத்து பெற்று சென்றுவிட்டாராம். இதையடுத்து அவா் தனது தாய் மாரியம்மாளுடன் வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் அவரது தாய் உறவினா் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, பாஸ்கரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com