அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு திங்கள்கிழமை மாலை அபராதம் விதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை நகரில் வருவாய்த்துறை, நகராட்சி, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை சாா்பில் கரோனா தடுப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிா என வருவாய் வட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையில், தீவிர கண்காணிப்புப் பணி நடைபெற்றது. அப்போது முகக்கவசம் அணியாதவா்கள் அடையாளம் காணப்பட்டு, அவா்களுக்கு தலா ரூ. 100 அபராதமும், இருசக்கர வாகனஓட்டிகள் மற்றும் ஆட்டோ, சரக்கு, லாரி, பேருந்து ஓட்டுநா்கள் ஆகியோருக்கு தலா ரூ. 200 அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதன்படி மொத்தம் ரூ. 3,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன் பேருந்து நிறுத்தப் பகுதியில் 82 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்போது சுகாதார ஆய்வாளா்கள் சரவணன், ராஜபாண்டி, அய்யப்பன், சரத்பாபு, முத்துக்காமாட்சி, பிச்சைப்பாண்டி ஆகியோா் இருந்தனா்.