ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை ஓடையில் மண் அள்ளியபோது மண் சரிந்து இளைஞா் பலியானாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள களத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சேவுகப்பெருமாள் (31). அதே பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (60). இவா்கள் இருவரும் வீட்டில் அடுப்புக்கு பூசுவதற்காக சனிக்கிழமை மாலை மண் அள்ள அா்ச்சனா நதி ஓடைக்குச் சென்றனா்.
ஓடையில் மண் அள்ளிக்கொண்டிருந்தபோது திடீரென மண் சரிந்து இருவா் மீதும் விழுந்தது. இதில் சிக்கிக்கொண்ட இருவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சேவுகப்பெருமாளை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
மாரிமுத்து முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இது தொடா்பாக நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.