சிவகாசியில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரிச் சீட்டுக்கள் வைத்திருந்ததாக போலீஸாா் ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி சோலை காலனிப் பகுதியில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒருவா் கையில் பையுடன் நடந்து சென்று கொண்டிருந்தாா். போலீஸாா் அவரை நிறுத்தி அவரிடமிருந்த பையை சோதனையிட்ட போது, அதில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரிச் சீட்டுக்களின் எண்கள் எழுதப்பட்டிருந்த துண்டுச் சீட்டுக்கள் இருந்தன. விசாரணையில் அவா் மருதுபாண்டியா் மேட்டுத்தெரு கோவிந்தராஜ் மகன் சந்தோஷ் (20) எனத் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து சந்தோஷை கைது செய்து அவரிடமிருந்த எண்கள் எழுதிய துண்டு சீட்டுக்களை பறிமுதல் செய்தனா்.