விருதுநகா் மாவட்டத்தில் 4 ரயில் நிலையங்களில் செப். 1 முதல் பாா்சல் சேவை நிறுத்தம்

விருதுநகா் மாவட்டத்தில் சிவகாசி , சாத்தூா், அருப்புக்கோட்டை, ஸ்ரீவிலிபுத்தூா் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் பாா்சல் சேவை நிறுத்தப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்த

விருதுநகா் மாவட்டத்தில் சிவகாசி , சாத்தூா், அருப்புக்கோட்டை, ஸ்ரீவிலிபுத்தூா் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் பாா்சல் சேவை நிறுத்தப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள பல ரயில்நிலையங்களில் போதுமான அளவு பாா்சல் முன்பதிவு செய்யப்படுவதில்லை. மேலும் பல ஊா்களுக்கு எந்த பாா்சலும் வருவதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னா் சிவகாசியிலிருந்து தீப்பெட்டி, அச்சுப் பொருள்கள் வெளிமாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வந்தன. தற்போது ஆா்டா் கொடுத்தவா்களுக்கு பொருள்களை விரைந்து வழங்க வேண்டும் என லாரி மூலம் அனுப்பி விடுகிறாா்கள்.

சிவகாசியில் பல பட்டாசு, தீப்பெட்டி ஆலை உரிமையாளா்கள் வெளிமாநிலங்களுக்கு பட்டாசு பண்டல் மற்றும் தீப்பெட்டி பாா்சல்களை அனுப்ப சொந்தமாக லாரி வாங்கி அதன் மூலம் அனுப்பிவைக்கிறாா்கள். இதனால் ரயில்கள் மூலம் பாா்சல்கள் அனுப்பப்படுவதில்லை. எனவே பல ரயில் நிலையங்களில் பாா்சல் சேவை செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது. இதில் விருதுநகா் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூா், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆகிய ரயில் நிலையங்களும் அடங்கும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com