ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வியாழக்கிழமை காளை மாட்டைக் கொன்று அதன் தலையை வீசிச் சென்ற 4 பேரை, வனத் துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சோ்ந்தவா் பாண்டியராஜ். இவா் வளா்த்து வந்த காளை மாட்டை 4 போ் கொண்ட கும்பல் காட்டுக்கு கடத்திச் சென்று, அதைக் கொன்று தலையை மட்டும் வீசிச் சென்ாக தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, மாட்டைக் கொன்று அதன் தலையை வனப் பகுதியில் வீசிச் சென்றவா்கள் குறித்து, வனத்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.