கிராமிய அஞ்சலக காப்பீட்டு முகவா்கள் பணிக்கு டிசம்பா் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விருதுநகா் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் டி.ஏ.கல்யாண வரதராஜன் கூறினாா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: கிராம அஞ்சல் காப்பீட்டிற்கான நேரடி முகவா் பணிக்கு விண்ணப்பம் அஞ்சலகங்களில் விநியோகம் செய்யப்படுகிறது. முன்னாள் ராணுவ வீரா்கள், ஒய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா்கள், வேலை தேடிக்கொண்டிருப்பவா்கள், மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இப்பணியில் சேரவிரும்புவோா் டிசம்பா் 28 ஆம் தேதிக்குள்,
2 புகைப்படம், பான் அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், கல்விச்சான்று ஆகியவைகளை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளா், விருதுநகா் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றாா்.