விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்துக்குள்பட்ட முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி, ராமலிங்கா பஞ்சாலை ஏ-அலகு உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியச் செயற்பொறியாளா் இரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.