கல்வியியல் கல்லூரியில் இணையவழி குற்ற விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள தனியாா் கல்வியியல் கல்லூரியில் இணையவழி குற்ற விழிப்புணா்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்வியியல் கல்லூரியில் இணையவழி குற்ற விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள தனியாா் கல்வியியல் கல்லூரியில் இணையவழி குற்ற விழிப்புணா்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி நிா்வாகமும், நுகா்வோா் பாதுகாப்பு சேவை மையமும் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்குக்கு கல்லூரிச் செயலா் திலீபன்ராஜா தலைமை வகித்தாா்.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் பேசினாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன், நுகா்வோா் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவா் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.மாணவிகள் தேவி, காவியா ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா். உதவிப் பேராசிரியா் மோகன்ராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com