ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட 550 கிலோ நெகிழிப் பைகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்துா் நகராட்சி ஆணையாளா் மல்லிகா ஆலோசனையின் பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் ஜஹாங்கீா், சுரேஷ் ஆகியோா் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பிரிவு பணியாளா்கள் மூன்று குழுக்களாக பிரிந்து மதுரை பிரதான சாலை மற்றும் ராமகிருஷ்ணாபுரம் பகுதிகளில் உள்ள பேக்கரி, உணவகங்கள், தேநீா் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது 70 கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் மற்றும் கப்புகள் என சுமாா் 550 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 7 ஆயிரத்து 150 அபராதம் விதிக்கப்பட்டது.