ராஜபாளையத்தில் சசிகலா விடுதலையாகி சென்னை வந்ததையடுத்து, அவரை வரவேற்கும் விதமாக அமமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் திங்கள்கிழமை கொண்டாடினா்.
ராஜபாளையம்- சங்கரன்கோவில் முக்கு பகுதியில் 39 ஆவது வாா்டு செயலா் மாரிமுத்து, 32 ஆவது வாா்டு செயலா் வெள்ளத்துரை ஆகியோா் தலைமையிலும், 37 ஆவது வாா்டு செயலா் ச. மணிப்பாண்டியன், இணைச் செயலா் கருப்பசாமி பாண்டியன், ரவி ஆகியோா் முன்னிலையிலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.