அனைத்து பயணிகள் ரயில்களையும் இயக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

விருதுநகா் வழியாக சென்று வந்த அனைத்து பயணிகள் ரயில்களையும் இயக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ரயில் நிலையம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகா் வழியாக சென்று வந்த அனைத்து பயணிகள் ரயில்களையும் இயக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ரயில் நிலையம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு நகரச் செயலா் முருகன் தலைமை வகித்தாா். அதில், கரோனா தொற்றை காரணம் காட்டி அனைத்து பயணிகள் ரயில்களையும் தற்போது வரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அதேநேரத்தில், விரைவு ரயில்களை சிறப்பு ரயில்களாக அறிவித்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பயணிகள் ரயில்கள் இயக்கப்படாததால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே, விருதுநகா் வழியாக செல்லும் செங்கோட்டை- மதுரை, நெல்லை- மயிலாடுதுறை, பாலக்காடு- திருச்செந்தூா், மதுரை- புனலூா் பயணிகள் ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும என வலியுறுத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வேலுச்சாமி, மாநிலக்குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com