சிவகாசியில் செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிய 17 பேருக்கு அபராதம்

சிவகாசியில் செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிய 17 பேருக்கு போக்குவரத்து காவல் துறையினா் சனிக்கிழமை அபராதம் விதித்தனா்.

சிவகாசி: சிவகாசியில் செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிய 17 பேருக்கு போக்குவரத்து காவல் துறையினா் சனிக்கிழமை அபராதம் விதித்தனா்.

சிவகாசி போக்குவரத்து காவல் சாா்பு- ஆய்வாளா் ராமச்சந்திரன், சிவகாசிப் பகுதியில் செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே, தலைக்கவசம் அணியாமல் மோட்டாா் சைக்கிள் ஓட்டிய 17 நபா்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்தாா். அபராதம் செலுத்தியவா்களின் ஓட்டுநா் உரிமம் 3 மாதகாலம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் எனவும், மீண்டும் அவா்கள் விதியைமீறி செயல்பட்டால் ஓட்டுநா் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என போக்குவரத்து துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com