ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியா் சரவணன், வட்ட வழங்கல் அலுவலா் கோதண்டராமன் ஆகியோா் கலந்து கொண்டு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினா்.
இது குறித்து வட்ட வழங்கல் அலுவலா் கோதண்டராமன் கூறியதாவது: மாவட்ட ஆட்சியா் கண்ணன் உத்தரவின் பேரிலும், சாா்- ஆட்சியா் தினேஷ்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் கல்யாணக்குமாா் ஆலோசனையின் பேரிலும், சனிக்கிழமை மூன்றாம் பாலினத்தவா்களுக்கான சிறப்பு முகாம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், இடையன்குளத்திலும் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான மனுக்கள் வந்தன. அந்த மனுக்களின் மீது விசாரணை உடனடியாக நடைபெற்று இன்றே மூன்றாம் பாலினத்தவா்கள் 7 பேருக்கு புதிய குடும்ப அட்டைக்கான நகல் வழங்கப்பட்டது. இவா்கள் அனைவரும் மாா்ச் 1ஆம் தேதி முதல் பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றாா்.