சிவகாசியில் புதுப்பிக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் இரா. கண்ணன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
சிவகாசி தெற்கு ரத வீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம், மத்திய அரசின் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ. 26 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளா் கே. சங்கா், மேலாளா் (தணிக்கை) நாகராஜன், உற்பத்தி
மற்றும் வடிவமைப்பு மேலாளா் ஞானபிரகாசம், சிவகாசி விற்பனை நிலைய மேலாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.