சிவகாசி அருகே டிராக்டரில் வைக்கோல் பாரம் ஏற்றும்போது தவறி விழுந்து காயமடைந்தவா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி அருகேயுள்ள செங்லமலப்பட்டியைச் சோ்ந்த விவசாயி ராஜேந்திரன் (44). இவா் உறிஞ்சிகுளம் கண்மாய்ப் பகுதியில் உள்ள தோட்டத்தில், டிராக்டரில் வியாழக்கிழமை வைக்கோல் பாரம் ஏற்றும்போது, தவறி விழுந்தாராம்.
இதில் பலத்த காயமடைந்த அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.