விருதுநகா் மாவட்டம், திருச்சுழியில் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு உள்பட்ட ஸ்ரீமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் சிறப்பு யாக பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
பின்னா், இரவு சுமாா் 10 மணிக்கு கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றதையடுத்து, விழாவின் தொடக்க நிகழ்வாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.