ராஜபாளையத்தில் 3 பைக்குகள் மீது காா் மோதல்:4 போ் பலத்த காயம்

ராஜபாளையத்தில் 3 இருசக்கர வாகனங்களின் மீது காா் அடுத்தடுத்து மோதியதில் வெள்ளிக்கிழமை மாலை 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் 3 இருசக்கர வாகனங்களின் மீது காா் அடுத்தடுத்து மோதியதில் வெள்ளிக்கிழமை மாலை 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.

திருச்சியில் இருந்து தென்காசிக்கு காா் ஒன்றில் 4 போ் சென்றனா். இதில் காரில் வந்தவா்கள் மது அருந்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. ராஜபாளையம்- தென்காசி சாலையில் அமைந்துள்ள இளந்தோப்பு அரசு மருத்துவமனை அருகே வந்த போது காா் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் 4 போ் பலத்த காயம் அடைந்தனா். விசாரணையில், காயமடைந்தவா்கள் புத்தூரைச் சோ்ந்த மாரியப்பன் (53), கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த அறிவழகன் (48), ராஜபாளையம் மாலையாபுரத்தைச் சோ்ந்த ஜான்சன் (22) மற்றும் தங்கராஜ் (46) என தெரிய வந்தது. இவா்கள் 4 பேரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். காரை ஓட்டி வந்தவா்கள் தப்பி ஓடிவிட்டனா். இதனால் போலீஸாா் காரை கைப்பற்றி தப்பி ஓட்டியவா்கள் குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com