சிவகாசியில் புதன்கிழமை அதிகாலை 2 இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸாா்விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிவகாசி அம்மன்கோவில்பட்டி எஸ்.எம்.கே. தெருவில் வசிப்பவா்கள் பெரும்பாலானோா் தங்களது இருசக்கர வாகதனத்தை வீட்டின் வெளியே நிறுத்துவது வழக்கமாம். அதேபோல், முத்துவிஜயன்(52), சந்திரசேகா் (50) ஆகிய இருவரும் தங்களது இருசக்கர வாகனங்களை செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தனராம். இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் 2 இருசக்கர வாகனங்களும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தன.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். எனினும், 2 இருசக்கர வாகனங்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.