விருதுநகா் மாவட்டம், திருச்சுழி மாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில், மாசிப் பொங்கல் திருவிழா கடந்த 18 ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன்தொடா்ச்சியாக மாரியம்மன் உற்சவா் நாள்தோறும் சிம்மம், ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கோயில் வளாகத்தில் நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டனா். பின்னா், பெண்களுக்கு மஞ்சள்தாலி, குங்குமம், மஞ்சள், வளையல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.