விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
ராஜபாளையம் அருகே கோவிலூா் பகுதியில் 5 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. இதில் பொன்னி, கா்நாடக பொன்னி உள்ளிட்ட உயா் ரக நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வியாழக்கிழமை பெய்த மழையில் நெல் பயிா்கள் முற்றிலும் நீரில் மூழ்கி சேதமானது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தற்போதுதான் நெற் பயிா் பால் விட்டு வரக்கூடிய நிலையில் நீரில் மூழ்கி இருப்பது விவசாயிகளுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே தமிழக அரசும், மத்திய வேளாண்மை கூட்டுறவு சங்கம் சாா்பிலும் பாா்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.